குஷ்பு ஆபாச படம்-குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
![]() |
மேக்ஸிம் பத்திரிக்கையில் நடிகை குஷ்புவின் படம் ஆபாசமாக பிரசுரிக்கப்பட்டவழக்கில், சென்னை போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த மேக்ஸிம் பத்திரிக்கை இந்தியாவிலிருந்தும் தற்போதுவெளியாகிறது. இந்தியப் பதிப்பின் முதல் இதழில் நடிகை குஷ்புவின் படத்தைஆபாசமான முறையில் பிரசுரிதித்திருந்தனர்.
டூ பீசில் நிற்கும் பெண்ணின் முகத்தின் மீது குஷ்புவின் முகம் ஒட்டப்பட்டு கிராபிக்ஸ்முறையில் அந்தப் படம் தயாராகியிருந்தது. இந்தப் படத்திற்குக் 100 சதவீதம் போலிஎன்று தலைப்பிட்டிருந்தனர்.
இந்தப் படம் மிகவும் ஆபாசமாக இருப்பதாக குஷ்பு கொந்தளித்தார். பத்திரிக்கைஆசிரியர் உள்ளிட்டோர் மீது சென்னை மாநகர காவல்துறையில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கையில் இறங்கி மேக்ஸிம் இதழ்களைக்கைப்பற்றினர் மேலும், பத்திரிக்கையின் இந்தியப் பதிப்பு ஆசிரியர் சுனில்மெஹ்ரா,கிராபிக்ஸ் பிரிவின் தலைவர் அஞ்சான் தாஸ், பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர்சேவியர் கொல்லாகோ,
![]() |
துணை பொதுமேலாளர் (சர்க்குலேஷன்) தீபக் பட், பிராந்திய சர்க்குலேஷன் மேலாளர்பசல் ஹுசைன் கான் ஆகியோர் மீது சென்னை தலைமை பெருநகர நீதிமன்றத்தில்,வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் பட், கான் ஆகியோர் மட்டும் முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.மற்றவர்களுக்கு சென்னை உயர்நீதிமனறத்திலும், உச்சநீதிமன்றத்திலும் முன் ஜாமீன்மறுக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில் இந்த வழக்கில் சென்னை போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளனர். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
மொத்தம் 120 பக்கஙக்ள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், 31 சாட்சிகள்சேர்க்கப்பட்டுள்ளனர். மேக்ஸிம் ஆசிரியர் உள்ளிட்டோர் மீது ஐ.பி.சி.292 (ஏ),மத்திய அரசின் பெண்களை இழிவுபடுத்துவதை தடை செய்யும் சட்டத்தின் 3, 4, 5ஆகிய பிரிவுகள் மற்றும் தமிழக அரசின் பெண் கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு 4ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications