இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ப.சி.: ராமதாஸ்
விழுப்புரம்:
பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவோடு வெற்றி பெற்ற மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தரவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது,உயர் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்க காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் அதரவோடு தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரம் மட்டும் ஆதரவுதெரிவிக்காதது வருந்தத்தக்கது. என்எல்சியின் பங்குகளை தனியாரிடம் விற்பதை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர்கருணாநிதி கையாண்ட விதத்தை, இட ஒதுக்கீட்டு பிரச்சனையிலும் மேற்கொண்டால் அவருக்கு ஆதரவாக பாமகநிற்கும்.
பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலாத அவலநிலைஏற்பட்டுள்ளது. இதை படிப்படியாக 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவதை கைவிட்டு, ஒரே தவணையில்நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக நடப்பு கல்வியாண்டில் இதை நிறைவேற்ற வேண்டும். இதற்காக அவசர சட்டத்தை பிறப்பித்து மத்தியஅரசு தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் ஊடகங்களின் போக்கை கண்டித்து சென்னையில்இம்மாதம் 25ம் தேதி பாமக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். தேவைப்பட்டால் டெல்லிக்குசென்று அங்கு போராட்டம் நடத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications