மனைவி, மகள்களுக்கு மூளை சலவை:ஜக்கி வாசுதேவ் மீது வழக்கறிஞர் புகார்
கரூர்:
கோவையைச் சேர்ந்த பிரபல ஆன்மீகப் பிரசாரகரும், யோகா கலைஞருமான ஜக்கிவாசுதேவ், தனது மனைவி, மகள்களை மூளைச் சலவை செய்து ஆஸ்ரமத்திலேயேவைத்துக் கொண்டுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
![]() |
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் யோகா மையத்தை நடத்தி வருபவர் ஜக்கிவாசுதேவ். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆன்மீகப் பிரசாரம் மற்றும்யோகா பயிற்சி இவரது மையத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஏராளமானோர் வாசுதேவின் சீடர்களாக உள்ளனர்.
இந் நிலையில் கரூரைச் சேர்ந்த பரமேஸவரன் என்ற வழக்கறிஞர் போலீசில்கொடுத்துள்ள புகாரில்,
நான் எனது மனைவி சுகந்தி, 2 மகள்கள் ஆகியோர் வாசுதேவின் சீடர்களாகஇருந்தோம். ஆனால் வாசுதேவின் போக்கில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனதுமனைவி, மகள்களை மூளைச் சலவை செய்து தனது மையத்திலேயே வைத்துக்கொள்ள வாசுதேவ் திட்டமிட்டது எனக்குத் தெரியவந்தது.
இதையடுத்து நான் அங்கிருந்து விலகி விட்டேன். எனது மனைவி, மகள்களையும்அங்கே போக வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தேன். இந் நிலையில் வெளியில்சென்ற எனது மனைவி, மகள்கள் வீடு திரும்பவில்லை.
அவர்க்ளை மூளைச் சலவை செய்து வாசுதேவ் தனது கட்டுப்பாட்டில்வைத்திருக்கலாம் என சந்தேகப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications