திமுக-அதிமுக கடும் வாதம்: கருணாநிதி ஆவேசம்
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த முதல்வர் கருணாநிதி எனதுமுதல்வர் பதவியை தூக்கி எறிந்து விட்டு விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன்என்று கூறியதால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது, அதிமுக உறுப்பினர் கருப்பசாமிஒரு வார்த்தையைக் குறிப்பிட்டார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்தனர்.அப்போது அதிமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து திமுகஉறுப்பினர்களுக்கு கண்டனம் தெரிவித்து பேசினர்.
இரு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களும், அமைச்சர்கள் சிலரும் சேர்ந்துஆளாளுக்கு கடுமையாக பேசினர். பலர் ஒருமையில் பேசியதால் சபையில் பெரும்அமளி நிலவியது.
அப்போது குறுக்கிட்ட அதிமுக கொறடா, செங்கோட்டையன் பேசியவார்த்தையிலிருந்து, கடைசியாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்பேசியது வரையிலான வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றுசபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கையை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசினார். அவர் கூறுகையில்,மேலும், மேலும் இந்த சபை அசிங்கமாக்கப்படுகிறது. ஆளுங்கட்சி உறுப்பிறனர்கள்வீடு பற்றி குறிப்பிட்டதற்கு கருப்பசாமி பதில் சொன்ன விதம் தான் இந்த விளைவைஏற்படுத்தியது. எனவே அந்த வார்த்தையிலிருந்து கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்பேசியது வரையிலான வார்த்தைகளை நீக்க வேண்டும்.
இந்த அவையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக இதை நான்சொல்கிறேன். அது வேண்டாம் என்று அவர்கள் விரும்பினால், என்னிடம்உள்ளஆதாரங்களை கையெழுத்துப் பிரதிகளை, கடிதங்கள் உள்ளிட்ட சான்றுகளுடன்வரத் தயார்.
முதல்வர் என்ற கவுரவத்தை பதவியை மறந்து விட்டு கூட நான் வாதிட தயாராகஇருக்கிறேன் என்று ஆவேசமாக கூறினார் கருணாநிதி.
இதைதத் தொடர்ந்து கருப்பசாமி முதல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதுவரையிலான வாரத்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி சபாநாயகர்ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications