இரட்டைப் பதவி வகிப்பதாக பிரதமர், ப.சிதம்பரம் மீது புகார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளைவகிப்பதாக குடியரசுத் தலைவருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாக்கு அனுப்பப்பட்டுள்ள புகார் மனுவில், ராஜீவ் காந்திஅறக்கட்டளையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறங்காவலர்களாக உள்ளனர்.இந்தப் பதவி ஆதாயம் தரும் பதவியாகும்.எனவே இருவரும் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பொறுப்புகளை வகிக்க தகுதியவற்றவர்கள் என்று அறிவிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை தேர்தல் ஆணையத்திற்கு குடியரசுத் தலைவர் அலுவலகம்அனுப்பி வைத்துள்ளது.
இந்த மனுவை யார் அனுப்பியது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. பிரதமர் மீதே ஆதாயம் தரும்இரட்டைப் பதவி புகார் எழுந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications