மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு:விசாரணை அதிகாரி திடீர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த உதவி ஆணையர்திடீர் என தற்கொலை செய்து கொண்டார்.
மும்பையில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி ரயில்கள், நிலையங்களில் தொடர்குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 200 பேர் இறந்தனர். சிமி அமைப்பின் உதவியுடன்லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்புதான் இந்தத் தாக்குதலை நடத்தியதுவிசாரணையில் தெரியவந்தது.இந்த வழக்கை மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்துவருகின்றனர். இந்த விசாரணைக் குழுவில் உதவி ஆணையர் வினோத் பட்என்பவரும் இடம் பெற்றிருந்தார்.இந் நிலையில் நேற்று நள்ளிரவு இவர் மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைசெய்து கொண்டார்.குண்டுவெடிப்பு வழக்குக்காகவே இவர் ஊழல் தடுப்புப் பிரிவிலிருந்து தீவிரவாதத்தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்தாரா அல்லது விசாரணை தொடர்பாகஇவருக்கு மிரட்டல் ஏதும் வந்ததா என்று தெரியவில்லை.











Click it and Unblock the Notifications