For Daily Alerts
Just In
ஈராக்: ஆந்திர யாத்ரீகர்கள் 3 பேர் சுட்டுக் கொலை
டெல்லி:
ஈராக்கில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த 3 யாத்ரீகர்கள்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஈராக்கில் உள்ள கர்பலா நகருக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் மீதுதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி வந்துள்ள ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி, உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீலை சந்தித்து இதுகுறித்து பேசினார். அதற்கு பாட்டீல் பதிலளிக்கையில், இந்தத்தகவல் இன்னும் அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்தப் படவில்லை. வெளியுறவுஅமைச்சகத்திடம் மேல் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக ரெட்டியிடம் தெரிவித்தார்.
Comments
Story first published: Saturday, September 2, 2006, 5:30 [IST]