ஜீவஜோதிக்கு நாளை மறுமணம்!
வேதாரண்யம்:
சரவண பவன் ராஜகோபாலுடன் ஏற்பட்ட பழக்கத்தால் தனது கணவரை பறிகொடுத்தஜீவஜோதிக்கு நாளை வேதாரண்யத்தில் மறுமணம் நடைபெறவுள்ளது.சென்னை வேளச்சேரியில் முன்பு வசித்து வந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர்பிரின்ஸ் சாந்தகுமார். ஜீவஜோதியின் தந்தை சரவணபவன் ஹோட்டலில் வேலைபார்த்து வந்தார். அப்போது ஜீவஜோதியின் அழகைப் பார்த்து மயங்கிய ஹோட்டல்அதிபர் ராஜகோபால் ஜீவஜோதியை அடைய நினைத்து பல உதவிகளைவழங்கினார்.
ஆனால் அவரது முயற்சிகளுக்கு பலன் கிடைக்காதால் ஆத்திரமடைந்த ராஜகோபால்அடியாட்களை வைத்து பிரின்ஸ் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்றுமலையில் தள்ளி கொலை செய்து விட்டதாக சில வருடங்களுக்கு முன்புபெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஜீவஜோதி தனது சொந்த ஊரான நாகை மாவட்டம்தேத்தாக்குடிக்கு சென்று குடியேறினார். ஆனால் ராஜகோபால் தனது வக்கீல்களுடன்அங்கு வந்து வழக்கை வாபஸ் பெறு என்று கூறி மிரட்டியதாக புதிய சர்ச்சைஏற்பட்டது. இதுதொடர்பாகவும் ராஜகோபால் மீது புது வழக்குப்பதிவுசெய்யப்பட்ட்து.
![]() |
இந்த சம்பவத்திற்குப் பின்னர் தனது பெற்ரோருடன் தஞ்சைக்கு இடம் பெயர்ந்தார்ஜீவஜோதி. அங்குள்ள கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஜீவாலேடீஸ் டெய்லர்ஸ் என்ற பெயரில் தையல் கடையை நடத்தி வருகிறார்.
கணவரை இழந்து பெற்றோருடன் வசித்து வரும் ஜீவஜோதி, மறுமணம் செய்துகொள்ளம் முடிவுசெய்துள்ளார். இவருடன் பள்ளிக்காலத்தில் உடன் படித்ததண்டபாணி என்பவரையே ஜீவஜோதி கல்யாணம் செய்து கொள்ளவுள்ளார்.ஏற்கனவே தண்டபாணி, ஜீவஜோதியை காதலித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அப்போது அதை ஏற்காமல் பிரின்ஸ் சாந்தகுமாரை காதலித்து திருமணம்செய்து கொண்டு விட்டார் ஜீவஜோதி. தற்போது ஜீவஜோதியின் நிலையைப் பார்த்துவருந்திய தண்டபாணி, அவரைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகதெரிவிக்கவே அதை ஏற்றுக்கொண்டு தண்டபாணியை கரம் பிடிக்கமுடிவு செய்தார்ஜீவஜோதி.
நாளை தஞ்சையில் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் குறித்து ஜீவஜோதிகூறுகையில், எனக்கு நாளை கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கு மேல் எதுவும்தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.













Click it and Unblock the Notifications