முல்லைப் பெரியாறு: பிரதமரை சந்திக்கிறார் கருணாநிதி!
சென்னை:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி சந்திக்கத்திட்டமிட்டுள்ளதாக சட்டசபையில் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று சிபிஐ தலைவர் சிவபுண்ணியம் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.அப்போது அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர்தலைமையிலான குழு பிதமரை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டார்.இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில், முதல்வர் கருணாநிதியும், விரைவில்பிரதமரை சந்திக்கவுள்ளார். இதுதொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும். கேரளாவைச் சேர்ந்த சில அரசியல்கட்சிகள், பத்திரிகைகள், முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் இந்தப் பிரச்சினையை தேவையில்லாமல் ஊதிவிட்டு வருகிறார்கள்.
பரபரப்பான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் இவற்றுக்கு தமிழக அரசு பதில் அளிக்கவிரும்பவில்லை. இவர்களுக்கு பதில் அளிப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு விடப் போவதில்லை.நமது பக்கம் நீதி, நியாயம் உள்ளது. எனவே அமைதி காத்து பிரச்சினையை சுமூக முடிக்க வேண்டும் என்பதேதமிழக அரசின் நிலையாகும் என்றார் துரைமுருகன்.
சிபிஐ தலைவர் கோவிந்தசாமி பேசுகையில், கேரள அரசுடன் பேச்சு நடத்தி இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாண வேண்டும். இப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண ஆர்வமாக இருப்பதாக கேரள முதல்வர்அச்சுதானந்தன் சமீபத்தில் தமிழகத்திற்கு வந்திருந்தபோது தெரிவித்திருந்தார்.
இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவு கெட்டு விடாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழக அரசுமுயற்சிக்க வேண்டும் என்றார். அதற்கு துரைமுருகன் பதிலளிக்கையில், முல்லைப் பெரியாறு அணைவிவகாரத்தில் தமிழகத்தின் உரிமை எள்ளளவும் விட்டுக் கொடுக்கப்பட மாட்டாது. அதில் தமிழக அரசுஉறுதியாக இருக்கிறது.
பிரதமரை கேரள குழு சந்தித்தபோது, கேரள முதல்வரும், அம் மாநில எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்துபிரதமரிடம் மனு கொடுத்தனர். அந்த நிலை தமிழகத்தில வரவே வராது. அதுதான் தமிழக மக்களின் தலைவிதிஎன்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications