முஸ்லீம் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு பாலஸ்தீன அமைப்பு எச்சரிக்கை
துபாய்:
பாலஸ்தீன பகுதிக்குள் நுழையும்முஸ்லீம் அல்லாதவர்களை தாக்கப் போவதாகஹோலிஜிகாத் என்ற அமைப்பு எச்சரித்துள்ளது.
இணையதளம் ஒன்றின் மூலம் ஹோலி ஜிகாத் அமைப்பு இந்த எச்சரிக்கையைவிடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையில், பாலஸ்தீன எல்லைக்குள் நுழையும் முஸ்லீம்அல்லாத வெளிநாட்டினறை சிறை பிடிக்கப் போகிறோம. எங்களிடம் சிக்கும்வெளிநாட்டவர்களின் உயிருகக் உத்தரவாதம் கிடையாது.அவர்கள் முஸ்லீம்களாக மாறினால் மட்டுமே அவர்களை விடுவிப்பதுகுறித்துபரிசீலிப்போம். எங்களுக்கு எதிரானவர்களை எதிர்த்து போரிடுமாறு எங்களுக்குகடவுள் உத்தரவிட்டுள்ளார். அதை நாங்கள் ஏற்று போரிடுவோம்.எங்களிடம் பிடிபடுவோரின் உயிரை, இஸ்லாம் மட்டுமே காக்க முடியும்.
அவர்களது ரத்தம் இஸ்லாமியர்களின் ரத்தமாக இருந்தால் மட்டுமே உயிர்தப்பமுடியும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.இந்த அமைப்பு கடந்த மாதம் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிநிறுவனத்தின் 2 செய்தியாளர்களை கடத்திச் சென்று பின்னர் விடுவித்தது.
இருவரும் முஸ்லீம்களாக மதம் மாற ஒப்புக் கொண்ட பின்னரே அவர்கள்விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகே ஹோலி ஜிகாத்அமைப்பு பிரபலமடைந்தது.












Click it and Unblock the Notifications