எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 ரயில்வே ஊழியர்கள் பலி!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ரயில் தண்டவாளத்தைப் பரிசோதித்துக் கொண்டிருந்த ரயில்வேஊழியர்கள் 3 பேர், குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பரிதாபமாக இறந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அருகே அய்யலூர்-கல்லுப்பட்டி ஆகியஊர்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தை பரிசோதிக்கும் பணியில் ரயில்வேஊழியர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். பணியை முடித்து விட்டு டிராலி மூலம் அவர்கள்திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துள்ளது. ரயிலைப் பார்த்ததும்டிராலியில் இருந்த 4 பேர் கீழே குதித்து உயிர் தப்பினர். ஆனால் 2 பெண்கள் உள்பட3 பேர் மட்டும் கீழே குதிக்க முடியாமல் டிராலியில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மீதுரயில் மோதியதில் 3பேரும் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.












Click it and Unblock the Notifications