மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் யு.ஏ.இ இந்தியர்கள்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
ஐக்கிய அரபு எமிரேட்டில் (யு.ஏ.இ) வேலைபார்த்து வரும் இந்தியர்கள் அதிகஅளவில் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலை பார்த்து வரும் வெளிநாட்டவர்கள் குறித்து ஒருஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன் டிவுகளில் வெளிநாட்டவர்களிடையே குறிப்பாகஇந்தியர்களிடையே மன அழுத்தம் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.நீண்ட நேரம் வேலை பார்ப்பது, வேலை பார்க்கும் இடத்தில் காணப்படும் பாரபட்சம்,ஊர் ஞாபகம் ஆகியவையே இந்த மன அழுத்தத்திற்கு முக்கியக் காரணம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.ஏ.இயில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களில் 10 பேரில் ஒருவருக்கு வீட்டுநினைவு அதிகம் வாட்டுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மன அழுத்தம்உள்ளவர்களுக்கு எதிலும் நாட்டம் இல்லாமை, ஓய்வின்மை, எரிச்சல், செக்ஸில்நாட்டம் குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு, தற்கொலை நினைவு, பசியின்மைஉள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இது தவிர தீராத தலைவலி, செரிமானக் குறைபாடு, உடல்வலி உள்ளிட்டஉபாதைகளும் ஏற்படுகின்றனவாம்.












Click it and Unblock the Notifications