வைகோ மீது தேச துரோக வழக்கு: உயர்நீதீமன்றத்தில் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேச பிரிவினை குறித்து பொதுக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர்வைகோ மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும்என்று கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பால் என்பவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பால்.காங்கிரஸ் பிரமுகரான பால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.

அதில், கடந்த மாதம் 21ம் தேதி சென்னை தி.நகரில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில், வைகோ வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார். தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினார்.பிரபாகரனை ஆதரித்தும் பேசினார்.

தமிழகத்தில் காஷ்மீர் உருவாகும் என்று பேசியுள்ளார். அவரது கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளரான வேளச்சேரி மணிமாறன் ஏ.கே.47 துப்பாக்கிஏந்திப் போராடத் தயார் என்று கூறி கைதாகியுள்ளார். இருவரும் ஒரே மாதிரியாக பேசியுள்ள போதிலும் மணிமாறனை மட்டும் போலீஸார்கைது செய்துள்ளனர்.

பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், தேசப் பிரிவினைக்குஆதரவாக பேசியதாலும் வைகோவை கைதுசெய்ய வேண்டும் என்று கோரிசென்னை மாநகரகாவல்துறை ஆணையருக்கு தபால் மூலம், மாம்பலம் போலீஸ்நிலையத்தில் மேலும் புகார் கொடுத்தேன். ஆனால் போலீஸார் ஒரு நடவடிக்கையும்எடுக்கவில்லை.

எனவே வைகோ மீது தேச துரோகம், தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம்விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து அவரைக் கைது செய்யஉத்தரவிட வேண்டும் என்று கூறியள்ளார் பால்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+