வறுமை: 70 வயது தாத்தாவை மணந்த 22

Subscribe to Oneindia Tamil

கயா (பீகார்):

வறுமையின் பிடியில் சிக்கியுள்ள தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கண்பார்வையற்ற 70 வயது தாத்தாவை மணந்துள்ளார் 22 வயது பெண்.

பீகார் மாநிலம் மகயா மாவட்டத்த்ை சேர்ந்தவர் மெஹருன்னிசா. 22 வயதான இவரதுகுடும்பம் வறுமையில் சிக்கித் தவித்து வருகிறது. வீட்டில் ஒருவேளைசாப்பாட்டுக்கே கஷ்டம்.

இந் நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அலி ஹசன் என்ற 70 வயது முதியவர்பெரும் பணக்காரர் ஆவார். ஆனால் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். குழந்தைகளும் தந்தையை விட்டு விட்டு சென்று விட்டனர்.

ஏராளமான பணம் இருந்தும் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாமல் தவித்து வந்தார்ஹசன். அவருக்கு கண் பார்வையும் கிடையாது.

இதைப் பார்த்த மெஹருன்னிசா, அலி ஹசனை திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்தார். இதன் மூலம் அலி ஹசனுக்கும் துணை கிடைக்கும், தனது குடும்பத்தின்வறுமைக்கும் விமோச்சனம் கிடைக்கும் என்பது அவரது எண்ணம்.

இதற்கு அலி ஹசன் சம்மதம் தெரிவித்தார். ஆனால் மெஹருன்னிசாவின்குடும்பத்தார் இதை ஏற்கவில்லை. ஊர் மக்களும் இந்த கல்யாணத்தை எதிர்த்தனர்.இருப்பினும் மெஹருன்னிசா, அலி ஹசனை பிடிவாதமாக கல்யாணம் செய்துகொண்டார்.

தங்களை மீறி மெஹருன்னிசா, அலி ஹசனை கல்யாணம் செய்து கொண்டதால்அவரது குடும்பத்தினர் ஊரைவிட்டு போய் விட்டனர். குடும்ப வறுமையை போக்கஅலி ஹசனை கல்யாணம் செய்து கொண்ட மெஹருன்னிசா இதனால்சோகமடைந்துள்ளார்.

இருப்பினும் அலி ஹசனுக்கு நல்ல துணையாக இருப்பேன் என்று சோகத்தை மறந்துஎதார்த்தமாக பேசுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+