கடலில் வீசப்பட்ட மீனவர்கள்: இலங்கை கடற்படை வெறிச்செயல்!

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம்:

நாகை மாவட்ட மீனவர்கள் 2 பேரை இலங்கை கடற்படை கடலில் தூக்கி வீசியது. அவரகள் கதி என்ன என்பதுதெரியவில்லை.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள செந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்குச்சொந்தமான படகில், அவரது தந்தை சபாபதி, பாலு, ராஜாங்கம், செல்வமணி ஆகிய மீனவர்கள் கடந்த 7ம் தேதிகாலை மீன் பிடிக்க சென்றனர்.

கோடியக்கரைக்கு கிழக்கே நடுக் கடலில் அவர்கள் மீன் பிடிக்கத் தொடங்கினர். அங்கு செந்தூர் கிராமத்தைச்சேர்ந்த 50 மீனவர்கள் ஏற்கனவே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

மறுநாளும் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மாலையில் ஒரு சிறிய கப்பல் அங்கு வந்தது.இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் மீன் பிடித்துக் கெண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகளில் இறங்கிமீன்களை பறித்தனர். பினனர் நான்கு மீனவர்களை கடலில் குதிக்குமாறு உத்தரவிட்டனர்.

அதற்கு தமிழக மீனவரக்ள், மீன்களை வேண்டுமானால் எடுததுக் கொள்ளுங்கள், எங்களை விட்டு விடுங்கள்என்று கெஞ்சினர். ஆனால் ஈவு இரக்கமில்லாத அந்த காட்டு மிராண்டி வீரர்கள், நான்கு பேரையும் தூக்கி கடலில்வீசினர்.

இதில் சக்திவேல், செல்வமணி ஆகியோர் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் நீந்தி கரை சேர்ந்தனர்.வயதான சபாபதி, பாலு ஆகியோர் கரைக்கு வரவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.இருவரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கடலில் வீசப்பட்ட பாலுவுக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் கல்யாணம் ஆனது. அவரது மனைவி சித்ராகர்ப்பிணியாக உள்ளார். கடலில் மூழ்கிய கணவரை நினைத்து அவர் கதறி அழுதது செந்தூர் கிராமத்தையேபெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+