14 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச கல்வி-கலாம்
திருவனந்தபுரம்:
அடுத்த ஆண்டு முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச கட்டாய கல்வி வழங்கப்படும் என குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம் வந்த ஜனாதிபதி கலாம் திருவனந்தபுரம் ஸ்ரீசித்திரை திருநாள் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல்சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் நடத்த விழாவில் உரையாற்றினார்.பின்னர் பல்கலைக்கழக செனட் ஹாலில் நடந்த விருது வழங்கும் விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையதலைவரும், விஞ்ஞானியுமான ஜி.மாதவன் நாயருக்கு ஸ்ரீசித்திரை திருநாள் விருதை வழங்கி பாராட்டி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
நாட்டில் ஜனநாயகம் மலருவதற்கு முன்பாகவே இளைஞர்கள் ஓட்டுப்போட வேண்டும். ஜனாநாயகம் மலரவேண்டும் என விரும்பியவர் சித்திரை திருநாள் மகாராஜா ஆவார். அவரது பெயரில் கொடுக்கபடும் இந்தவிருதை மாதவன் நாயருக்கு வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்.
நமது நாட்டில் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும். இதற்கானசட்டத்தில் நான் கையெழுத்து இட்டுவிட்டேன். இச்சட்டம் அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் எனஎதிர்பார்க்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications