தமிழ்ப் பல்கலைக்கழக இணைவேந்தர் பொன்முடி!
தஞ்சாவூர்:
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இணை வேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை நியமித்துமுதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைச் சட்டவிதிப்படி கல்வித்துறை அமைச்சராக இருப்பவரே இணைவேந்தராகஇருக்க வேண்டும். 1996ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தமிழ் வளர்ச்சித் துறை ஏற்படுத்தப்பட்டது.அத்துறையின் கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டது.அப்போது அத்துறையின் அமைச்சராக இருந்த தமிழ்குடிமகன் இணை வேந்தராக பொறுப்பு வகித்தார்.அதன்பின் 2001ம் ஆண்டு பொறுப்பேற்ற அதிமுக அரசில் கல்வித்துறையின் கீழ் தமிழ் வளர்ச்சித்துறைசேர்க்கப்பட்டது. அப்போது கல்வி அமைச்சராக இருந்த தம்பிதுரை பல்கலைகழகத்தின் இணைவேந்தராகபொறுப்பு வகித்தார்.
இப்போது திமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் நிலையில் தமிழ் வளர்ச்சித்துறை முதல்வரின்கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி இணைவேந்தராக பொறுப்பு வகிக்க வேண்டியவர் முதல்வராஅல்லது உயர்கல்வித் துறை அமைச்சரா என்று குழப்பம் ஏற்பட்டது.
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பிரமணியன் இக்குழப்பத்தை தீப்பதன் அவசியம் குறித்து தமிழ்வளர்ச்சித்துறைக்கு கடிதம் எழுதினார். இக்கடிதம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை இணைவேந்தராக நியமித்து கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications