அப்சலை உடனே தூக்கிலிட வேண்டும்: அத்வானி
டெல்லி:
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகம்மது அப்சல் குருவை ஒரு நாள்கூட தாமதிக்காமல் உடனடியாக தூக்கிலிட வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்ததலைவருமான எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தை தாக்கிய வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளஅப்சலுக்கு ஒரு நாள் கூட தாமதிக்காமல் தண்டனைய நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் நமது நாட்டுக்குதீங்கு இழைக்க முயல்பவர்களுக்கு இந்தியா கருணை காட்டாது என்பதை தீவிரவாதிகளுக்கு உணர்த்த வேண்டும்.குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கருணை மனுவை அவர் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்குகுடியரசுத் தலைவர் அனுப்பியுள்ளார். இதனால் தூக்குத் தண்டனை தாமதமாகும் என்று செய்திகள்வெளியாகின்றன.
அப்சல் தூக்குத் தண்டனையை ஒரு நாள் தாமதித்தாலும் கூட அது தவறான செய்தியை வழங்கி விடும். நாட்டைக்காக்க போராடிக் கொண்டிருக்கும் பாதுகாப்பு படையினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
உள்துறை அமைச்சகம் அப்சலின் கருணை மனுவை உடனடியாக நிராகரித்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கைஅனுப்ப வேண்டும். இதை செய்ய மத்திய அரசு தவறினால் நாடு முழுவதும் போராட்டம் நடத்த பாஜகநடவடிக்கை எடுக்கும் என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications