ராஜன் செல்லப்பாவுக்கு முன் ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மத்திய தொகுதியில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில், அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவுக்குமதுரை உயர்நீதிமன்றக் கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுரை தெற்குவாசல் அருகே சின்னக்கடை வீதியில் கடந்த 5ம் தேதி திமுக மற்றும் அதிமுகவினருக்கிடையேகடும் மோதல் நடந்தது. இதில் பல வாகனங்கள் தாக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து திமுக சார்பிலும், அதிமுக சார்பிலும் தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜன் செல்லப்பா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ராஜன் செல்லப்பா மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், ராஜன் செல்லப்பா மற்றும் வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ள பிறஅதிமுகவினருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications