சுரங்கப் பாதையில் சிக்கிய 12 மாணவர்கள் மீட்பு
சென்னை:சென்னையில் மழை நீரில் மிதக்கும் சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்ட 12 கல்லூரி மாணவர்களை தீயணைப்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை நகரில் பத்து நாட்களாக கன மழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாகத்தான் மழை பெரிய அளவில்இல்லாமல் ஓய்ந்துள்ளது. தொடர் மழையால் சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன.
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர் இன்னும் வடியாமல் தேங்கிக் கிடக்கிறது. இதேபோல சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் இன்னும் தேங்கிக் கிடக்கிறது. அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கை படு மந்தமாகநடந்து வருகிறது.
சென்னை புறநகரில் உள்ள முத்துக்குமரன் கல்லூரியைச் சேர்ந்த பேருந்து, 12 மாணவர்களுடன் வந்துகொண்டிருந்தது. பரங்கிமலை, தில்லை கங்கா நகர் ஆகியவற்றை இணைக்கும் சுரங்கப் பாதை வழியாக அந்தப்பேருந்து வந்தபோது வெள்ளம் என தேங்கிக் கிடந்த தண்ணீரில் சிக்கிக் கொண்டது.
பேருந்தை முன்னும், பின்னும் நகர்த்த முடியாமல் ஓட்டுநர் திணறினார். பேருந்துக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால் மாணவர்களும், ஓட்டுநரும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
உடனடியாக தீயணைப்புப் படையினருக்கு தகவல் தரப்பட்டது. ஒக்கியம் துரைப்பாக்கத்திலிருந்து விரைந்து வந்ததீயணைப்புப் படை வீரர்கள், படகு மூலம் சுரங்கப் பாதைக்குள் சென்று மாணவர்களை மீட்டனர்.