பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்: கருணாநிதி
திருச்சி:தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருச்சியில் வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்றுமாலை தொடங்கி வைக்கிறார். இதற்காக சென்னைலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு அவர் வந்தார்.
ரயில் நிலையத்தில் திமுகவினர் திரளாக கூடி கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ரயில் நிலையவரவேற்புக்குப் பின்னர் கருணாநிதி செய்தியாளர்களை: சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின்கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
கேள்வி: பஸ் கட்டணம் உயரும் என கூறப்படுகிறதே?
பதில்: உயர்த்த மாட்டோம்.
கேள்வி: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவீர்களா?
பதில்: குறைக்க கூடாது என்று சொல்வோம் என நினைக்கிறீர்களா? விலைவாசியைக் குறைத்து மக்களுக்காகபாடுபடுகிற அரசு இந்த அரசு.
கேள்வி: இலங்கை பிரச்சினை தொடர்பாக அந்நாட்டு அரசு நாடாளுமன்றக் குழு அமைத்திருப்பது பலன்தருமா?
பதில்: மிகுந்த பலன் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. போரை நிறுத்த உகுந்த வழி எதுவோ, அதைமத்திய அரசு சிந்தித்து இலங்கையில் அமைதி காண முன்வர வேண்டும். இதுவே மக்கள் எதிர்பார்ப்பும் கூட.
இலங்கைப் பிரச்சினையில் எனது தனிப்பட்ட கருத்தை சூழ்நிலை வரும்போது நான் வெளியிடுவேன்.
சென்னை மட்டுமல்லாது, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை என பல பகுதிகளிலும் தொழில் வளர்ச்சித்திட்டங்களை அறிவித்துள்ளோம். படிப்படியாக அவை நடைமுறைக்கு வரும்.
கோவையில் மென்பொருள் பூங்கா அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. விரைவில் திருச்சியிலும்அமைக்கப்படும்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்தியஅரசுக்கு அனுப்பியுள்ளோம். இது சம்பந்தபமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
டாக்டர் ராமதாஸ் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விமர்சிக்கவில்லை. அவர் கூறியது தவறான அர்த்தத்தில்பத்திரிகைகளில் வந்துள்ளது. மொத்தமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தால் பலன் இல்லை என்றுதான் அவர்கூறியுள்ளார் என்றார் கருணாநிதி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications