For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த் ஒத்துழைக்க வேண்டும்: டிஆர்.பாலு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை கோயம்பேட்டில் அமையவுள்ள அடுக்கு மேம்பாலம் உருவாக விஜயகாந்த் ஒத்துழைக்க வேண்டும்என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை கிண்டியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில், கோயம்பேட்டில் பல திசைகளுக்கு வாகனங்கள் செல்வதற்கு வசதியாகஅடுக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

இந்த மேம்பாலம் அமைப்பதற்காக அங்கு விஜயகாந்த்தின் கல்யாண மண்டபம் உள்பட 164 கட்டடங்களைஇடிக்கவுள்ளோம். இதில் விஜயகாந்த் அரசியல்வாதி என்பதால் அவரது கட்டடத்தை இடிக்கத் துடிப்பதாககூறுவது நியாயமல்ல. மற்ற கட்டடங்களுக்குச் சொந்தமானவர்கள் சாதாரணர்கள் தான், அவர்கள்அரசியல்வாதிகள் கிடையாது.

இத்திட்டத்திற்கு விஜயகாந்த் மாற்றுத் திட்டம் கொடுத்தார். ஆனால் அவர் தந்த திட்டத்தில், வலது புறம் அதாவதுபாரினையில் இருந்து பாடி செல்ல வழி இல்லை. மேலும் பாரினையில் இருந்து கத்திப்பாராவுக்கு செல்லும் பாதை40 அடியாக உள்ளதா என்பதைக் கூற வேண்டும்.

மாற்றுத் திட்டம் இந்திய காங்கிரஸ் விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

முன்பு கத்திப்பாராவில் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிட்கோ கட்டடம், அங்கு கட்டப்பட்டு வரும்மேம்பாலப் பணிகளுக்காக இடிக்கப்பட்டது. அதற்காக அரசை எதிர்ப்பதாக அர்த்தம் கிடையாது. வளர்ச்சித்திட்டங்களுக்கு அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். அது விஜயகாந்த்துக்கும் பொருந்தும் என்றார் பாலு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X