நேரு பிறந்த நாள்-விமானத்தில் ஏழை சிறார்கள்
சென்னை:முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி புதுவையைச் சேர்ந்த 30 பள்ளி மாணவ, மாணவியர்பெங்களூருக்கு விமானம் மூலம் உல்லாச பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் இன்று நேரு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி சபரி வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவ, மாணவியருக்கு இன்று வித்தியாசமான அனுபவம்கிடைத்தது. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்த மாணவ, மாணவியரை விமானம் மூலம் பெங்களூருக்குஅழைத்துச் சென்று அவர்களுக்கு விமான பயண அனுபவத்தைக் கொடுத்து குஷிப்படுத்தியது.
இதுகுறித்து பள்ளி முதல்வர் சரவணன் கூறுகையில், சிறுவர் தினத்தையொட்டி எங்களது பள்ளி மாணவ,மாணவியருக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்க நாங்கள் முடிவு செய்தோம். அதன் விளைவுதான்இந்த உல்லாச விமான பயணம்.
விமானங்கள் குறித்து புத்தகத்தில் படித்த அனுபவம் மட்டுமே கொண்டிருந்த இவர்களுக்கு விமானத்தில் ஏறிபயணம் செய்தது புதிய அனுபவமாக இருந்தது. இதற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஒத்துழைக்க முன்வந்ததால்இந்த உல்லாச பயணம் சாத்தியமானது.
இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியர் பெங்களூருக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.அவர்களுடன் புதுவை மாநில போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சரும், பள்ளி நிர்வாகிகளும் உடன் சென்றனர்என்றார் சரவணன்.












Click it and Unblock the Notifications