கேரளாவுக்கே திருப்பி விடப்படும் பெரியாறு நீர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியைத் தாண்டியுள்ளது.அணைக்கு கூடுதலாக வரும் நீரை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரளஅணைக்கே திருப்பி விட்டு வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம்.ஆனால் கேரள அரசு 136 அடி வரை மட்டுமே தேக்கி வைக்க அனுமதிக்கிறது.இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த உத்தரவில்,அணையின் உயரத்தை தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தவும்,அணையை பலப்படுத்திய பின்னர் 152 அடிக்கு உயர்த்தவும் உத்தரவிட்டது.

ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க கேரள அரசு மறுத்து அவசரச் சட்டம்கொண்டு வந்து விட்டது. இந்த நிலையில் தற்போது கேரளத்தில் பெய்து வரும் மழைகாரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியைத் தாண்டியுள்ளது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 136.40 அடியாக இருந்தது.

இந் நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் கூடுதல் நீரை தமிழகபொதுப்பணித்துறை அதிகாரிகள் இடுக்கி அணைக்கு திருப்பி விட்டு வருகின்றனர்.

கேரள அரசின் வீண் பிடிவாதத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கும் அபரிமிதமானநீர் வீணாக இடுக்கி அணைக்குப் போய் வருகிறது.

இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டநடவடிக்கையை முடிவு செய்ய பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டு ஆலோசனைக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+