ஆசிரியர் செக்ஸ் டார்ச்சர்- மாணவிகள் புகார்
சென்னை:பள்ளி ஆசிரியர் ஒருவர் தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து வருவதாக 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்றுகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார்.
சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு தியாகராஜர் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 20க்கும்மேற்பட்ட மாணவிகள் இன்று காலை காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தனர். அதில்கூறப்பட்டுள்ளதாவது:
நாங்கள் 8ம் வகுப்பு படித்து வருகிறோம். எங்களது கணக்கு ஆசிரியரான சுப்புராஜ் (45) தினமும் எங்களிடம்தவறாக நடக்கிறார். வகுப்பு முடிந்ததும் மாணவர்களை போகச் செச்லிவிட்டு மாணவிகளை மட்டும் இருக்கச்சொல்வார்.
நாங்கள் மட்டும் இருக்கும்போது எங்களிடம் செக்ஸ் வார்த்தைகளை பயன்படுத்தி அசிங்கமாக பேசுவார்.அவரை நெருங்கி நிற்கச் சொல்வார். கையை பிடித்து இழுப்பார், கன்னத்தை கிள்ளுவார்.
சீருடை அழுக்காக இருப்பதாக சொல்லி சுடிதார், பாவாடை சட்டையை இழுத்து வயிற்றை தடவுவார். மிகஅசிங்கமாக பேசி தொந்தரவு செய்வார்.
நோட்டில் கையெழுத்து வாங்கச் சென்றால் குனிந்து நிற்கச் சொல்வார். அவரது அசிங்கமான பார்வையில் இருந்துதப்பவே முடியாது. அவருடன் வெளியில் வரச் சொல்லி தொந்தரவு செய்தார். நாங்கள் மறுத்ததால் திட்டினார்,மேலும் பெயில் ஆக்கிவிட்டுவதாகவும் மிரட்டுகிறார்.
சாக்பீசை எங்கள் நெஞ்சில் வீசுவார். சுப்புராஜின் இந்த தொந்தரவுகளுக்கு ஆசிரியை விஜயாவும் உடந்தையாகஉள்ளார். சுப்புராஜை பற்றி எங்களிடம் விஜயா பேசுவார். சுப்புராஜ் பற்றி யாராவது தப்பாக பேசினால்தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்.
இது குறித்து பெற்றோரிடம் சொன்னோம். 10 நாட்களுக்கு முன் தலைமை ஆசிரியையிடம் புகார் செய்தும்பலனில்லை. எனவே ஆசிரியர் சுப்புராஜ் மீதும் ஆசிரியை விஜயா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅந்த மாணவிகள் கூறியுள்ளனர்.
மாணவிகளே போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் தந்தததால் பரபரப்பான போலீசார் உடனடியாக சுப்புராஜ்மற்றும் விஜயா மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சுப்புராஜைப் பிடிக்கச் சென்றபோது அவர் விவரம் தெரிந்து தலைமறைவாகிவிட்டார்.