பாறை உருண்டது: போடி மலைப் பாதை சேதம்
போடிநாயக்கனூர்:தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே போடி மெட்டு என்ற இடத்தில் கேரளாவுக்குச் செல்லும் மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு சாலை சேதமடைந்தது. இதனால் கேரள மாநிலம் மூணாறுக்கு போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.
போடி மெட்டு பகுதியில் மலைப் பாதையில் மொத்தம் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதுதான்கேரள மாநிலம் மூணாறு செல்வதற்கான ஒரே பாதையாகும். இந்த கொண்டை ஊசி வளைவுகளில் 13வதுவளைவில் டார்ஜிலிங் என்ற ராட்சத பாறை உருண்டு மலைப் பாதை சேதமடைந்தது.
பாறை உருண்டு விழுந்ததால் அந்த சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும், ஏராளமான மரங்களும்விழுந்தன. இதனால் மூணாறுக்குச் செல்லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
சேதமடைந்த சாலையை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தீவீரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலச்சரிவு காரணமாக போடியிலிருந்து மூணாறு செல்லும் வாகனங்கள், கம்பம் மெட்டு வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications