For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானில் ஏவுகணையை தாக்கி அழித்த பிருத்வி

By Staff
Google Oneindia Tamil News

பாலஸோர்:ஏவுகணையைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைச் சோதனையை இந்தியாவின் பிருத்வி-2 ஏவுகணை மூலம் இந்தியவிஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பிருத்வி பலமுறை ஏவிப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தாக்க வரும் ஏவுகணையை, திருப்பி ஏவுகணையால் தாக்கி அழிக்கும் சோதனையை நடத்தபாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இந்த சோதனை இன்று ஒரிசா மாநிலம சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் நடந்தது.

காலை 10.10 மணிக்கு பிருத்வி 2 ஏவுகணை 3வது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அதற்குஅடுத்த சில விநாடிகள் கழித்து, வீலர் தீவில் உள்ள 4வது ஏவுதளத்திலிருந்து இன்னொரு பிருத்வி ஏவுகணைவிண்ணில் செலுத்தப்பட்டது.

முதலில் ஏவுப்பட்ட ஏவுகணை தாக்க வரும் ஏவுகணையாகவும், 2வது ஏவுகணை அழிக்கும் ஏவுகணையாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது. முதலில் ஏவுப்பட்ட பிருத்வியை, 2வதாக ஏவப்பட்ட தாக்கும் ஏவுகணை திட்டமிட்டபடிசரியான இடத்தில் தாக்கி அழித்தது.

இந்த ஏவுகணைத் தாக்குதல் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக திட்ட இயக்குநர் சரஸ்வத் கூறியுள்ளார். இந்தசோதனையை பாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் ஏராளமானோர் பார்த்தனர்.

இதுபோல ஏவுகணையை தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா இப்போதுதான் முதல் முறையாக நடத்துகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X