பாகிஸ்தான் ஷாஹீன் ஏவுகணை சோதனை
இஸ்லாமாபாத்:அணு ஆயுதங்களை சுமந்து 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும்திறன் படைத்த ஷாஹீன்-1 ரக ஏவுகணையை ஏவி பாகிஸ்தான் பரிசோதித்துள்ளது.
பாகிஸ்தான் விஞ்ஞானிகள் கடந்த 16ம் தேதி கெளரி ரக ஏவுகணையை ஏவிப்பரிசோதித்தனர். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை 1300கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்ந்து சென்று தாக்க்க கூடிய வல்லமை படைத்தது.
இந்த நிலையில் இன்று காலை ஷாஹீன் 1 ரக ஏவுகணையை ஏவி பாகிஸ்தான்சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை அணு ஆயுதம் மற்றும் சாதாரணகுண்டுகளை தாங்கிச் செல்லக் கூடியதாகும்.
இந்த சோதனை எங்கு நடந்தது என்ற தகவலை பாகிஸ்தான் வெளியிடவில்லை.ராணுவ தலைமை தளபதி ஈசான் உல் ஹக் இந்த சோதனையை நேரில் பார்த்தார்.
கஸ்னாவி, கெளரி, ஷாஹீன்1 ஆகிய ஏவுகணைகள் ஏற்கனவே பாகிஸ்தான்ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஷாஹீன்2 ரக ஏவுகணையை ஏவி பாகிஸ்தான்பரிசோதித்தது. அதைத் தொடர்ந்து பாபுர் என்ற ஏவுகணையையும் அது ஆகஸ்ட்மாதம் பரிசோதித்தது.












Click it and Unblock the Notifications