ஆசிரியர் அடி: எலி மருந்து சாப்பிட்ட மாணவன்
சென்னை:வகுப்பு ஆசிரியரும், தலைமை ஆசிரியையும் தொடர்ந்து அடித்துத் திட்டியதால் வெறுப்படைந்த 9வது வகுப்புமாணவன் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள மதுரவாயல் கம்பர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் சுனில் திவாகரன்.ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9வது வகுப்பு படிக்கிறான்.
கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் திவாகரன் வீக் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக 2 மாதங்களுக்கு முன்புதிவாகரனை வகுப்பு ஆசிரியர் கண்டித்து அடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பும் இதே காரணத்திற்காகஆசிரியர் அடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து திவாகரனின் பெற்றோரை வரவழைத்த தலைமை ஆசிரியை உமா, இனிமேல் இவனைபள்ளிக்கூடத்தில் அனுமதிக்க முடியாது. டிசியை வாங்கிச் செல்லுங்கள் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.அவரை சமாதானப்படுத்திய பெற்றோர், இனிமேல் நன்றாகப் படிப்பான் என்று கூறி பள்ளியில் விட்டுச்சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை திவாகரனை அழைத்த தலைமை ஆசிரியை, ஒழுங்காக படிப்பதில்லை என்று கூறிசரமாரியாக அடித்துள்ளார். இதனால் திவாகரன் வெறுப்படைந்தான். பள்ளிக்கூட இடைவேளை நேரத்தில்வெளியே சென்ற அவன் ஒரு கடையில் எலிக்கு வைக்கும் மருந்தை வாங்கி சாப்பிட்டு விட்டு வகுப்பில் போய்அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்தான். உடனடியாக அவனை அருகில் உள்ளமருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மாணவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகடாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
திவாகரனின் சகோதரி திவ்யா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவரும்ஆசிரியர் அடித்ததால்தான் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் திவாகரனும் அதேகாரணத்தால் தற்கொலைக்கு முயன்று உயிருக்குப் போராடி வருவதைப் பார்த்து அவனது பெற்றோர் துடித்துப்போய் கதறி அழுத வண்ணம் உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications