டிச.6: கோவை ரயில்வே பார்சல் சர்வீஸ் ரத்து
கோவை:பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் 69 இடங்களில் பதட்டமானவை என அடையாளம்காணப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதியையொட்டி கோவை, நீலகிரி மாவட்டம் முழுவதும் 4,000க்கும்மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை விமான நிலையம், ரயில்நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள் ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதே போல் லாட்ஜ்களில் தங்கி இருக்கும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நகரில் 69இடங்கள் பதட்டமான இடங்களாக அடையாளம் காணப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார்பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நகர் முழுவதும் வாகனங்கள் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் பாதைகளிலும் மேம்பாலங்கள்லும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். நகரில் முன்று நாட்களுக்குரயில்வே பார்சல் சர்வீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2 பட்டாலியன் வெளி மாநில போலீசாரும், தமிழ்நாடு சிறப்பு படை அதிரடிப்படை, ஆயுதப்படை போலீசாரும்கோவையில் நிலை கொண்டுள்ளனர்.
நாளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பழைய பஸ் நிலையம் மற்றும் பல்லடம் காட்டன்மார்க்கெட் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பாதுகாப்புதீவிரமாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications