ஹஜ்: 1,500 தமிழக யாத்ரீகர்கள் பயணம்
சென்னை:தமிழகத்தைத் சேர்ந்த 1500 ஹஜ் யாதீரீகர்கள் இதுவரை ஜெட்டாவுக்குப்பயணமாகியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் செய்தியாளர்களிடம்பேசுகையில், இதுவரை தமிழகத்திலிருந்து1500 ஹஜ் பயணிகள் ஜெட்டாவுக்குச் சென்றுள்ளனர்.
மேலும் 2000 பேர் டிசம்பர் பத்தாம் தேதிக்குள் ஜெட்டா செல்லவுள்ளனர். முதல்வர்கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்திலிருந்து ஹஜ் செல்லும்யாத்ரீகர்களுக்கான மானியத் தொகையை மத்திய அரசு 5 சதவீதம்உயர்த்தியுள்ளது.
இஸ்லாமியர்கள் மீது முதல்வர் கருணாநிதி காட்டும் பரிவுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம். அதேபோல, தமிழகத்திற்கு முன்பு ஒதுக்கப்பட்ட மானிய அளவைமீண்டும் அமல்படுத்தி அடுத்த ஆண்டு முதல் அதை நடைமுறைப்படுத்த மத்தியஅரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை 2 நாட்களுக்கு முன்பு சந்தித்துப்பேசினோம். இதுதொடர்பாக தான் டெல்லி செல்லும்போது பிரதமர் மன்மோகன் சிங்,வெளியுறவு இணை அமைச்சர் அகமது ஆகியோருடன் பேசி செய்வதாக அவர்உறுதியளித்தார்.
ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள தமிழக யாத்ரீகர்கள் ஜனவரி 6ம் தேதி முதல் 16ம்தேதிக்குள் தமிழகம் திரும்புவார்கள் என்றார் அபுபக்கர்.