புலிகளை தடை செய்தால் போர்: தமிழர் கட்சி
கொழும்பு:விடுதலைப் புலிகள் இயக்கத்தை அரசு தடை செய்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் வாய்ப்பு இல்லாமல்போய் விடும் என என தமிழ் தேசிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சமாதானப் பேச்சு நடத்தி வரும் நார்வே குழுவுக்கு எதிரானவேலைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது. நார்வே குழுவினருக்கு முட்டுக்கட்டை போடும் வகையில்புலிகளுடனான அவர்களது சந்திப்புக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
மேலும் புலிகளுக்கு தடை விதிக்கவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சேனாதிராஜா கூறுகையில்,
விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தடை செய்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் வாய்ப்பு இல்லாலலேபோய் விடும். புலிகள் முழு அளவில் போரை தொடங்கும் சூழ்நிலை உருவாகும். முழுமையான போர் ஏற்பட்டுநாடு அழிவுப் பாதைக்கு சென்று விடும். இதை இலங்கை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
நார்வே குழுவினர் புலிகளை சந்திக்க விடாமல் இலங்கை அரசு தடுத்தன் மூலம் அமைதி முயற்சியில்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டம் கொண்டு வந்து விடுதலைப் புலிகளை தடை செய்தால்அபாயகரமான நிலை ஏற்பட்டு விடும். ராணுவம் மற்றும் போலீசாரின் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும்என்றார்.
வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டு:
இதற்கிடையில் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், கச்சதீவிற்கும்,தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களது வலையில் ராக்கெட்வெடிகுண்டு சிக்கியது.
ராக்கெட் வெடிகுண்டை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.