சென்னையில் தமிழ் செம்மொழி ஆய்வு மையம்
சென்னை:சென்னையில் தமிழ் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்அர்ஜூன் சிங் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியார் அணை தொடர்பாக கடந்த 29ம் தேதி டெல்லி சென்ற கருணாநிதி, அர்ஜூர் சிங்கை சந்தித்துதமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்ததைத் தொடர்ந்து தொல்காப்பியர், திருவள்ளூவர் பெயரால் இரண்டுவிருதுகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னையில் தமிழ் செம்மொழி ஆய்வுமையம் ஒன்றை அமைக்க என்றும் வலியுறுத்தினார்.
இந் நிலையில் கருணாநிதிக்கு, அர்ஜூன் சிங் அனுப்பியுள்ள கடிதத்தில்,
செம்மொழியாம் தமிழ்மொழிக்காக தனியாக சென்னையில் ஒரு மத்திய மையம் அமைக்க வேண்டும் என்றஉங்களின் திட்டம் குறித்து நான் யோசித்தேன். செம்மொழிக்காக விசேஷ முக்கியத்துவம் அளிப்பது என்றஉங்கள் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.
அந்த வகையில் 11வது திட்டத்தில் தமிழ் செம்மொழிக்காக ஒரு மையத்தை அமைக்கும் திட்டத்தை சேர்க்கும்படிஎனது அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளேன் என அவர் அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications