பள்ளியில் விஷ வாயு-மாணவர்கள் மயக்கம்
சென்னை:சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் பரவிய விஷவாயுவை சுவாசித்த 15 மாணவர்கள் மயக்கமடைந்தனர்.
ஆழ்வார் திருநகர் வேலன் நகரில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
நேற்று மதிய இடைவேளைக்குப் பின்னர் மாணவ, மாணவியர் தங்களது வகுப்புகளில்அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது யு.கே.ஜி. வகுப்பறைக்கு அருகில்உள்ள கழிவு நீர்த் தொட்டியின் மேல் மூடி உடைந்தது.
அதிலிருந்து விஷ வாயு பள்ளி வளாகத்தில் பரவியது. இதை சுவாசித்த யுகேஜிபிள்ளைகள் மயங்கி விழுந்தனர். மொத்தம் 15 குழந்தைகள் மயக்கமடைந்ததால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆசிரியர்கள்அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இந்தத் தகவல் வெளியே பரவியதும்மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் அலறி அடித்து ஓடி வந்தனர். தங்களதுகுழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்வதாக கூறி கோஷமிட்டனர்.
கல்வித்துறைக்கும் தகவல் போய் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டார்.கழிவுநீர்த் தொட்டியின் மூடி உடையும் அளவுக்கு அதை சரியாக பராமரிக்காததுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications