கேரளத்துக்கு ஆப்பு-சேலத்தில் புதிய கோட்டம்
டெல்லி:இதுவரை கேரள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில், பாலக்காடு கோட்டத்தில் இருந்து வந்த கோவை, ஊட்டி,ஈரோடு ஆகிய ரயில்வே பிரிவுகள் புதிதாக உருவாக்கப்படவுள்ள சேலம் ரயில்வே கோட்டத்தில்இணைக்கப்பட்டுள்ளன.
வெறும் 20 எம்பிக்கள் இருந்தாலும் கட்சி வேறுபாடு இல்லாமல் டெல்லியில் நெருக்கடி தந்து தங்களுக்குவேண்டியதை சாதித்துக் கொள்வதில் கில்லாடிகள் கேரள அரசியல்வாதிகள்.
பல ஆண்டுகளாக ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்தது. இதனால்தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட பல ரயில்களைக் கூட மலையாளிகள் தட்டிப் பறித்தனர்.
ஆனால், மத்தியில் கூட்டணி ஆட்சிகள் அமைய ஆரம்பித்த பின்னரே நிலைமை மாறியது. கூட்டணிஆட்சிகளுக்கு ஆதரவு தந்த ஜெயலலிதாவும் சரி கருணாநிதியும் சரி தமிழக திட்டங்களுக்காக மத்தியஅரசுகளுக்கு நெருக்கடி தர தவறியதில்லை.
அதே போல பாமகவும் தனது எம்பிக்களில் யாரையாவது ஒருவரை தொடர்ந்து ரயில்வே இணையமைச்சராக்கிதமிழகத்துக்கு ஏகப்பட்ட திட்டங்களை அள்ளிக் கொண்டு வந்தது.
அந்த வகையில் தான் பாலக்காடு கோட்டம் என்ற பெயரில் தமிழகத்தின் முக்கியமான ரயில்வே பகுதிகளைதனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கொட்டம் அடித்து வந்த கேரளத்துக்கு ஆப்பு வைத்துள்ளார் ரயில்வேஇணையமைச்சரான பாமகவின் வேலு.
பாலக்காடு கோட்டத்தை பிரித்து சேலம் கோட்டத்தை உருவாக்கியுள்ள வேலு, அதில் கோவை உள்ளிட்ட சேர்க்கவழி செய்துள்ளார். இதற்கு வழக்கம் போலவே கேரள எம்பிக்கள் கூட்டாக டெல்லியில் எதிர்ப்பு தெரிவித்தனர்.சோனியா மூலமாக பிரஷ்ஷர் தர முயன்றனர்.
ஆனால், ரயில்வே அமைச்சர் லாலுவின் உதவியோடு அதையெல்லாம் வென்று பாலக்காடு கோட்டத்தை பிரிக்கவைத்துவிட்டார் வேலு.
இதன் மூலம் ரயில்வேயின் தமிழக பிரிவில் ஒரு பகுதியை கட்டுபடுத்தி வந்த கேரளத்திடம் இருந்து விடுதலைகிடைக்கவுள்ளது. தற்போது கோவை, ஊட்டி, உள்ளிட்ட பகுதிகளை சேலம் கோட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருந்து 135 கி.மீ தூர ரயில் தடம், சேலம் கோட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.சேலத்தில் ரயில்வே கோட்ட"ததுக்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க ரூ. 20 கோடி ஒதுக்கப்படவுள்ளது.முதல்கட்டமாக ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.