For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அர்ஜூன் சம்பத் ஒரு வழியாகக் கைது

By Staff
Google Oneindia Tamil News

Arjun Sampathபொள்ளாச்சி:ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை தகர்க்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இந்து மக்கள்கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை போலீஸார் பொள்ளாச்சியில் கைது செய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்டுசேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேரை போலீஸார் ஏற்கனவே குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத்தை போலீஸார் தேடி வந்தனர்.அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ஏற்கனவே நிராகரிக்ப்பட்டு விட்டது.மேலும் அவருக்கு எதிராக பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவையில் ஒரு அச்சகத்தில் அர்ஜூன் சம்பத் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்கவே,போலீசார் அங்கு சென்றனர். ஆனால், அர்ஜூன் சம்பத்தின் புகைப்படத்தைக் கூட பார்த்திராத அந்த போலீசார்,அச்சகத்தில் நுழைந்து அங்கிருந்தவரிடம் அர்ஜூன் சம்பத் இருக்காரா என்று கேட்க, அவர் இல்லை என்றுசொன்னதையடுத்து திரும்பி வந்துவிட்டார்கள்.

இதில் பெரிய காமெடி என்னவென்றால், அர்ஜூன் சம்பத் குறித்து போலீசார் விசாரித்த நபர் வேறு யாருமல்ல,அர்ஜூன் சம்பத்தே தானாம்.

இவ்வாறு அவரை முதலில் நழுவ விட்ட போலீசார் பின்னர் தவறை உணர்ந்து அலெர்ட் ஆகிபொள்ளாச்சியில் வைத்து அவரை அமுக்கினர். தனது உறவினரான சிவக்குமார்என்பவரது வீட்டில் தங்கியிருந்த அர்ஜூன் சம்பத்தைக் கைது செய்தனர்.

பின்னர் கோவை மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். அதன்பின்னர் திருச்சிக்கு அழைத்துச் சென்றனர். அர்ஜூன் சம்பத்தை விசாரித்து விட்டுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X