ஈரான் மீதான தடைக்கு இந்தியா எதிர்ப்பு
குவாலியர்:ஈரான் மீது ஐ.நா. விதித்துள்ள தடையால் அந்நாட்டின் அணு சக்தித் திட்டம்தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தியா கருத்துதெரிவித்துள்ளது.
ஈரான் தனது அணு ஆராய்ச்சித் திட்டங்களை நிறுத்தாததைத் தொடர்ந்துஅமெரிக்காவின் நெருக்குதலால் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சமீபத்தில் அந்நாட்டின்மீது தொழில்நுட்ப தடை விதித்தது.
இதுகுறித்து இந்தியா கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந் நிலையில்வெளியுறவு அமைச்சர் பிரணாப் மு.கர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பேச்சுவார்த்தை நடத்தித்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்குத்தீர்வு காண முயல வேண்டும்.
அணு சக்தித் திட்டத்தால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானால்தான் தடைகள்போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஈரான்மீதான தடையால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
ஈரான், இந்தியாவின் நட்பு நாடு என்றார் முகர்ஜி.