கோ.சி.மணிக்கு நெஞ்சுவலி-மயங்கி விழுந்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணிக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துமனையில்சேர்க்கப்பட்டார்.
கோட்டையில் தன் அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிழுந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் தீவிர இருதய சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டார்.
கோ.சி.மணி ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications