இந்தோனேசிய விமானம் எங்கே?
ஜகார்தா:இந்தோனேசியாவில் 102 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்துநொறுங்கிவிட்டதாகக் கருதப்படும் நிலையில் விமானத்தின் பாகங்கள் இன்னும்கண்டறியப்படவில்லை. விமானம் விழுந்த இடத்தில் மிக பலத்த மழை பெய்துவருவதால் மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளன.
![]() |
முன்னதாக இந்த விமானத்தின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும், 90பேர் பலியாகிவிட்டதாகவும் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் வந்த செய்திகள்தவறானவை என இந்தோனேஷிய விமானத்துறை அறிவித்துள்ளது.
ஆடம் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த போயிங்-747 விமானம்இந்தோனேசிய நேரப்படி நேற்று முன்தினம் சுராபயா என்ற நகரிலிருந்து ஜாவா தீவில்உள்ள மனேடோ நகருக்குக் கிளம்பியது.
2 மணி நேரத்தில் அந்த விமானம் மனோடோவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால்விமானம் வந்து சேரவில்லை. மேலும், விமான தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.இதனால் விமானம் காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கிவிட்டதாகவேகருதப்படுகிறது.
அந்த விமானத்தில் 96 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர். சுலவேசிமாகாணத்தில் உள்ள மமுஜு என்ற வனப்பகுதியின் கடும் புயல் மழையில் அந்தவிமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.
இன்னும் அந்த விமானத்தின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் எத்தனைபேர் உயிர் தப்பினர், எத்தனை பேர் இறந்தனர் என்றும் தெரியாமல் இந்தோனேஷியாபரிதவித்து வருகிறது.













Click it and Unblock the Notifications