புலிகள் கண்ணி வெடி-2 ராணுவ அதிகாரிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:விடுதலைப் புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி 2 ராணுவ அதிகாரிகள்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்க செய்தித் தொடர்பாளர் ராசய்யாஇளந்திரையன் கூறுகையில், வடக்கில் உள்ள நெடுங்கேணி பகுதியில் இலங்கைராணுவ குழு இன்று விடுதலைப் புலிகள் பகுதிக்குள் ஊடுறுவ முயன்றது.
அப்போது கண்ணி வெடியில் சிக்கி ராணுவ அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். 3பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் வாகனம் ஒன்றும் சேதமடைந்தது. இந்தவாகனம் இலங்கை அரசின் விவசாயத் துறைக்குச் சொந்தமானது என்றார்இளந்திரையன்.












Click it and Unblock the Notifications