சேலம் சிறையில் கைதிகள் பயங்கர மோதல்

Subscribe to Oneindia Tamil

சேலம்:சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே பெரும் மோதல் மூண்டது. இதில் 3 கைதிகள் படுகாயமடைந்தனர்.

நெல்லை சுரேஷ் என்பவர், கொலை வழக்கில் கைதாகி சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்ஜான்பாண்டியன் ஆதரவாளர். இவர் சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சுரேஷுடன் சேர்த்து அடைக்கப்பட்டிருந்த ராஜா, ரவி ஆகியோர் சுரேஷிடம் செல்போன்கேட்டுள்ளனர். ஆனால் சுரேஷ் தர மறுத்துள்ளார். இதையடுத்து சுரேஷ் மற்றும் அவரது ஆதரவு கைதிகளுக்கும்,ராஜா, ரவி மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது.

இரு தரப்பினரும் சிறை வளாகத்திற்குள் கட்டிப்புரண்டு கடுமையாக சண்டையிட்டுள்ளனர். இதில் ரவியின்கழுத்தை சிலர் பிளேடுகளால் சரமாரியாக அறுத்துள்ளனர். மேலும் ஆறுமுகம், சக்திவேல் ஆகிய கைதிகளும்கடுமையாக தாக்கப்பட்டனர்.

கைதிகளுக்கிடையே நடந்த இந்த பயங்கர மோதலால் சிறை வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது. அங்கு காவல்பலப்படுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+