மனைவி-மக்களை புறக்கணிக்கும் மூலிகை ராமர்
ஸ்ரீவில்லிபுத்தூர்:மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை தன்னையும், தனது குழந்தைகளையும்கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருவதாக அவரது மனைவி ஜெயந்தி விருதுநகர்மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹருக்கு ஜெயந்தி அனுப்பியுள்ளபுகாரில் கூறியிருப்பதாவது:
எனது தாயாரின் உடன் பிறந்த சகோதரர்தான் எனது கணவர் ராமர் பிள்ளை. நான்தான்ராமர் பிள்ளையின் சட்டப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான மனைவி.
எனக்கு 24 வயதில் ஆதிலட்சுமி என்கிற மகளும், கோவிந்தராஜ் என்கிற 23 வயதுமகனும் உள்ளனர். ஆதிலட்சுமி திருமண வயதில் உள்ளார். கோவிந்தராஜ் இன்னும்கல்யாணம் ஆகவில்லை.
எனது கணவர் ராமர் பிள்ளை என்னையும், எனது குழந்தைகளையும் விட்டுப் பிரிந்துபல வருடமாகிறது. அவர் வந்து எங்களைப் பார்ப்பதில்லை. குடும்பத்துக்குப் பணம்கொடுப்பதில்லை. என்ன ஏது என்று கேட்பதில்லை.
எங்களை விட்டுப் பிரிந்து இடையர்குளத்தில் வசிக்கும் ராமையா மனைவி வேணுதேவி மற்றும் அவரின் மகளும், ஜெகதீஸ்வரன் என்பவரின் மனைவியுமானபூங்கனியுடன் வசித்து வருகிறார்.
மருத்துவ செலவு, சாப்பாடு, துணிமணி என எதற்கும் அவர் எங்களுக்குஉதவுவதில்லை. நானும் எனது குழந்தைகளும் எனது தாயார் கோவிந்தம்மாவின்வீட்டை அடகுக்கு வைத்த பணத்தில்தான் பிழைப்பு நடத்தி வருகிறோம்.
தற்போது மத்திய அரசு ராமர் பிள்ளையின் கண்டுபிடிப்புக்கு பணம் கொடுக்கப்போவதாக கூறப்படுகிறது. எனவே அந்தப் பணத்திலிருந்து எங்களுக்கும், எனதுகுழந்தைகளின் திருமண செலவுகளுக்கும் உரிய பணத்தை எனது கணவர் வழங்கஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் எனது கணவர் என்னுடன் வந்து வாழவும் உதவி புரிய வேண்டும் எனகோரியுள்ளார் ஜெயந்தி.
சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ராமர் பிள்ளை எழுதிய கடிதத்தில் ஜனவரி1ம் தேதிக்குள் எனது கண்டுபிடிப்பை அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்தீக்குளித்து சாவேன் என ராமர் மிரட்டியிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications