கூட்டணியில் போட்டி மதிமுக- திமுக ஒப்புதல்
சென்னை:எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் தலைமையிலான மதிமுக விரும்பினால் திமுக கூட்டணியில் இணையலாம்என திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக உயர் மட்ட செயல்திட்டக் குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
இன்றைய கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய தீர்மானமாக நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வகைசெய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி 10ம் தேதி சென்னை மற்றும்மாவட்டத் தலைநகரங்களில் திமுக மகளிர் அணி சார்பில் பேரணிகள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நதிகளை தேசியமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கு முதல் கட்டமாக தென்னக நதிகளைஇணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இந்தஆண்டே அமல்படுத்த தேவையான ஆணையை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி ஒரு தீர்மானம்.இந்த இட ஒதுக்கீடு தனியார் நிறுவனங்களிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்குக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தை அணுகும் முயற்சிகளை எடுக்க இன்னொருதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர நல்வாழ்வு ஏற்பட அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் தலைமையிலான மதிமுக விரும்பினால் திமுக கூட்டணியில் ஒரு கட்சியாகஇடம் பெறலாம் எனவும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications