மனித வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கையில் சிங்களர் பகுதியில் சனிக்கிழமை நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 15 பேருந்து பயணிகள்இறந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு-கண்டி சாலையில், பஸ்சில் வெடிகுண்டு வெடித்ததில் 6 பயணிகள்பலியாயினர். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகல் மீண்டும் ஒரு பயங்கர வெடிகுண்டுச் சம்பவம் நடந்துள்ளது.

இலங்கையின் தெற்கில் உள்ள அம்பலங்கொடா மாவட்டம், ஹிக்கடுவா அருகே உள்ள மித்தியகோடா என்றஇடத்தில் கொழும்பிலிருந்து மாத்தரைக்கு ஒரு பேருந்து போய்க் கொண்டிருந்தது.

சனிக்கிழமை பிற்பகல் காலே சாலையில் அந்தப் பேருந்து போய்க் கொண்டிருந்தபோது பலத்த சப்தத்துடன்வெடிகுண்டு வெடித்தது. இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 40 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், காயமடைந்தவர்களில் பலரும்ஆபத்தான நிலையில் உள்ளனர். அனைவரும் கரபிடியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பெண் மனித வெடிகுண்டு மூலமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இன்னும் அது உறுதிசெய்யப்படவில்லை.

வெடித்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்தது. விடுதலைப் புலிகள் இதன் பின்னணியில் இருப்பதாகசந்தேகப்படுகிறோம் என்றார் அவர்.

கண்ணிவெடிக்கு 5 பேர் பலி:

இதற்கிடையே, வட கிழக்கில் நடந்த 3 தனித் தனி சம்பவங்களில் விடுதலைப் புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி4 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மன்னார்-மடவச்சியா சாலையில் பட்டங்குளம் என்ற இடத்தில் கண்ணி வெடியில் சிக்கி 3 ராணுவ வீரர்கள்உள்பட 4 பேர் பலியாயினர். வடக்கு யாழ்ப்பாணத்தில், உடுவில் என்ற இடத்தில் கண்ணி வெடியில் சிக்கி ஒருவீரர் கொல்லப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+