சிறுமியை கற்பழித்த எம்எல்ஏவின் உறவினர் கைது!
சென்னை:16 வயது சிறுமியை கற்பழித்த எம்.எல்.ஏ.வின் உறவினரையும், ஆட்டோ டிரைவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.
![]() |
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் கனகா. இவரது தந்தை கண்ணன் ஒரு கூலித் தொழிலாளி.அவருக்கு 5 பெண்கள். வறுமையில் வாடி வந்த அவர் தனது 16 வயது மகள் கனகாவை, சென்னைசூளைமேட்டில் உள்ள ஜேம்ஸ் என்பவரின் வீட்டில் வேலைக்காக அனுப்பி வைத்தார்.
வெகுளிப் பெண்ணான கனகா, ஜேம்ஸ் வீட்டிலும்,வெளியிலும் அனைவருடனும் சகஜமாக பேச அவருக்குஅக்கம் பக்கத்து ஆண்களிடமும் நல்ல பழக்கம் ஏற்பட்டது.
ஜேம்ஸின் குழந்தையை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்வார் கனகா. அப்போது மணிகண்டன் என்றபைனான்ஸ் நிறுவன உரிமையாளருடன் பழக்கம் ஏற்பட்டது. தினசரி பள்ளிக்குச் செல்லும்போது மணிகண்டனைதவறாமல் சந்தித்து வந்தார்.
இந் நிலையில் ஆண்களுடன் கனகா அதிக பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு வருவதை அறிந்த ஜேம்ஸின் மனைவிஅவரைக் கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட கனகா வீட்டிலிருந்து வெளியேறினார்.
குரோம்பேட்டையில் உள்ள தனது சித்தப்பா வீட்டுக்குப் போக முடிவு செய்தார். ஆனால் வீடு எங்கே உள்ளதுஎன்று தெரியாததால் மணிகண்டனை செல்போனில் தொடர்பு கொண்டார்.
இதையடுத்து தனது வீட்டில் வேலைக்கு வைத்துக் கொள்வதாக கூறி கொடுங்கையூரில் உள்ள தனது வீட்டுக்குகனகாவை அழைத்துச் சென்றார்.
அப்போது அவரது மனைவி சாந்தியும், குழந்தைகளும் தாய் வீட்டுக்குப் போயிருந்தனர். இதையடுத்து கனகாவைவற்புறுத்தி அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். 9ம் தேதியும், 10ம் தேதியும் இது தொடர்ந்தது.
இந் நிலையில் 11ம் தேதி வீட்டுக்கு வருவதாக மணிகண்டனின் மனைவி சாந்தி போன் செய்தார். இதனால் பயந்துபோன மணிகண்டன், கனகாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கோடம்பாக்கம் பாலத்திற்கு அருகேவிட்டு விட்டுச் சென்றார்.
இரவில் இப்படிக் கொண்டு வந்து விட்டு விட்டு மணிகண்டன் போய் விட்டதால் என்ன செய்வது என்றுதெரியாமல் குழம்பியுள்ளார் கனகா. அப்போது ஒரு ஆட்டோ வந்தது. அதை நிறுத்தி குரோம்பேட்டைக்குப்போகுமாறு கூறினார் கனகா.
ஆட்டோ டிரைவர் சேகரும், ஆட்டோவை குரோம்பேட்டைக்குத் திருப்பினார். கிண்டி வந்ததும் சித்தப்பா வீட்டுமுகவரி தெ>யுமா என்று கேட்டுள்ளார் சேகர். தெ>ரிாது என்று அவர் கூறவே, கீழே இறங்குமாறு கூறிய சேகர்,இதற்கு மேல் வர மாட்டேன், இதுவரை வந்ததற்கு 100 ரூபாய் கொடு என்று கேட்டுள்ளார்.
தன்னிடம் காசு இல்லை என்று அந்த பரிதாபச் சிறுமி கூறவே, சபலம் தட்டிய சேகர், ஆட்டோவுக்குள் கனகாவைத்தள்ளி கற்பழித்துள்ளா.
பின்னர் அவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மீண்டும் கோடம்பாக்கம் வந்து மணிகண்டன் வீட்டில்,கனகாவை விட்டு விடலாம் என்று எண்ணிய அவர், முகவரியைக் கேட்டுள்ளார்.
ஆனால் மணிகண்டன் கொடுங்கையூரில் இருக்கிறார். முகவரி சரியாக தெரியவில்லை, செல்போன் எண்தான்உள்ளது என்று கூறினார். இதையடுத்து கொடுங்கையூர் வந்த சேகர், அங்குள்ள மளிகைக் கடையில் இருந்தபடிமணிகண்டனுக்குப் பான் செய்தார். ஆனால் அவர் எடுக்கவில்லை.
இந் நிலையில் சேகரையும், ஆட்டோவுக்குள் பம்மியிருந்த கனகாவையும் பார்த்த மளிகைக் கடைக்காரர்காளிமுத்து என்ன நடந்திருக்கும் என்பதை சட்டெனப் பு>ந்து கொண்டு அருகில் உள்ள தொண்டு நிறுவனத்துக்குப்போன் செய்தார். அவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்து விட்டு விரைந்து வந்தனர்.
அனைவரும் சேர்ந்து சேகரை மடக்கிப் பிடித்தனர். கனகா மாம்பலம் போலீஸா>டம் ஒப்படைக்கப்பட்டார். காவல்நிலையத்தில் வைத்து கனகாவிடம் விசாரணை நடத்தியபோது, அவர் நடந்தைதக் கூறினார்.
இதையடுத்து சேகரை போலீஸார் கைது செய்தனர்.
நேற்று காலை மணிகண்டனுக்குப் போன் செய்த போலீஸார் வாகனம் வாங்க பைனான்ஸ் வேண்டும், பேசவாருங்கள் எனக் கூறி ஒரு இடத்திற்கு வர வைத்து அங்கு வைத்துப் பிடித்தனர்.
அவ>டம் விசாரணை நடத்தியபோது, தான் ஒரு எம்.எல்.ஏவின் உறவினர் என்று கூறி கதறி அழுதுள்ளார்மணிகண்டன். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.













Click it and Unblock the Notifications