வைகோவுக்கு ஆதரவா?-4 உறுப்பினர்கள் பல்டி
சென்னை:வைகோவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நாங்கள் கையெழுத்துப் போடவில்லை என்று நான்கு மதிமுக பொதுக்குழுஉறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி எல்.ஜி.ஆதரவாளரான சைதை சம்பத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை எதிர்த்து கட்சி நடவடிக்கைகளில் இவர்கள் இருவரும் தலையிடக் கூடாது என்று உத்தரவிடக் கோரிமதிமுக சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுடன் மதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 1300பேரும் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அதில், தாங்கள் வைகோ தலைமையிலான மதிமுகவில் இருக்கிறோம், வைகோவுக்கு ஆதரவாக உள்ளோம்என்று தெரிவித்திருந்தனர். தனித் தனி மனுவில் இதை அவர்கள் தெரிவித்திருந்தனர். நேற்று இந்த மனுக்கள்நீதிபதி தணிகாச்சலம் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.
அப்போது விருத்தாச்சலம் ரவிக்குமார், அரசம்பட்டி ஏழுமலை, தெள்ளாறு ரவி, நல்லூர் தங்கசீனிவாசன்ஆகியோர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.
அதில், நாங்கள் பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ளனர். எங்களிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கிஅதை வைகோவுக்கு ஆதரவாக நாங்கள் இருப்பதாக எழுதிக் கொண்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளனர்.
வைகோவுக்கு ஆதரவு தெரிவித்து நாங்கள் எந்தக் கையெழுத்தும் போடவில்லை என்று தெரிவித்திருந்தனர்.அப்போது மதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயராமன், எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியஇருவரையும் நிரந்தரமாக நீக்கி மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு ஆட்சேபனை தெரிவித்த எல்.ஜி. தரப்பு வழக்கறிஞர் வேங்கடபதி, ஏற்கனவே இருவரையும் நீக்கியதற்குஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அப்படி உள்ள நிலையில் நிரந்தரமாக அவர்களை நீக்கியதுநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விசாரணையை வருகிற 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications