நுழைவு தேர்வில் தோல்வி--பிஇ மாணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை அருகே பொறியியல் கல்லூரி மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியைச் சேர்ந்தவர் விஜயராமன். இவர் சென்னை அருகே காரப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார்பொறியியல் கல்லூரியில் பிஇ முதலாமாண்டு படித்து வந்தார்.
விஜயராமனின் அண்ணன் ராஜாராமனும் சென்னையில் உள்ள இன்னொரு தனியார் பொறியியல் கல்லூரியில்பிஇ இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இருவரும் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கிப் படித்து வருகின்றனர். நேற்று மாலை ராஜாராமன் வீட்டுக்குத்திரும்பியபோது விஜயராமன் தூக்குப் போட்டுத் தற்கொலை கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார் ராஜாராமன்.
சமீபத்தில் நடந்த ஐஐடி நுழைவுத் தேர்வில் விஜயராமன் தோல்வி அடைந்து விட்டார். இதனால் மனவருத்தத்துடன் காணப்பட்டாராம். இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்றுகூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications