இட ஒதுக்கீடு-சமூக நீதிக்கு எதிராக சதி: திருமா
திட்டக்குடி:தமிழகத்தில் உள்ள 69 இட ஒதுக்கீட்டை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுசமூக நீதிக்கு எதிரான சதி வேலையாகும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
திட்டக்குடியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
நீதிமன்றத்தின் பெயரால் 69 இட ஒதுக்கீட்டை பறிக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். அரசியல்சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்படும் சட்டம் நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது. இத்தனை காலமும்இப்படித்தான் நடைமுறையில் இருந்து வந்தது.
ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது. இதில் 7 நீதிபதிகள்இட ஒதுக்கீட்டை விரும்பாத உய்ர மட்டத்தினர் (உயர் ஜாதியினர்). எனவே இவர்கள் கூடிப் பேசி 9வதுஅட்டவணையை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தலாம் என தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள 69 இட ஒதுக்கீட்டை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் எனவும்தீர்ப்பளித்துள்ளனர். இது சமூக நீதிக்கு எதிரான சதி வேலையாகும். இதனன் தேசிய அளவில் சமூக நீதி சக்திகள்ஒன்று திரள வேண்டும்.
குறிப்பாக முதல்வர் கருணாநிதிக்கு சமூக நீதியை காக்க ஒட்டுமொத்த பொறுப்பும் கடமையும் உள்ளது. எனவேஇது தொடர்பாக சமூக நீதியில் அக்கறை கொண்ட முதல்வர்கள், சட்ட வல்லுனர்களின் மாநாட்டை டெல்லியில்கருணாநிதி கூட்ட வேண்டும். இதில் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பாகமுதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்பேன்
தமிழகத்தில் சில அதிகாரிகள் திமுக அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள்இருப்பதை அந்த சக்திகள் விரும்பவில்லை. இதைத் தான் சேப்பாளையம் தடியடி சம்பவம் (வி.சி. எம்எல்ஏரவிக்குமாரை போலீசார் தாக்கியது) எடுத்துக் காட்டுகிறது என்றார் திருமா.












Click it and Unblock the Notifications