லாரி மோதி கேபிஎன் பஸ்சில் தீ: 4 பேர் பலி
ஓசூர்:பெங்களூர் அத்திபலே அருகே தமிழகத்திலிருந்து சென்ற கே.பி.என். ஆம்னி பஸ் லாரி மீது மோதி தீப்பிடித்துஎரிந்ததில் 4 பேர் உடல் கருகி பலியாயினர்.
வேளாங்கண்ணியிலிருந்து பெங்களூருக்கு கே.பி.என். ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்றுஅதிகாலை ஓசூரைத் தாண்டி, அத்திபலே என்ற இடத்தில் பேருந்து போய்க் கொண்டிருந்தது.
அப்போது பக்கவாட்டிலிருந்து ஓவர்டேக் செய்த பால் லாரி ஒன்று, பேருந்தின் டீசல் டேங்க் மீது உரசி சாலைத்தடுப்பில் மோதியது. இதில் பேருந்தின் டீசல் டேங்க் பலத்த சப்தத்துடன் வெடித்துத் தீப்பிடித்துக் கொண்டது.
இதில் பேருந்து மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்தக் கோர விபத்தில் பேருந்தின் ஓட்டுனர்சுரேஷ்குமார், கிளீனர் இஸ்ரவேல் பாக்யராஜ், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் என 4 பேர் உடல்கருகி உயி>ழந்தனர்.
பேருந்தில் இருந்த 35 பயணிகளில் பலருக்கும் பலத்த தீக் காயம் ஏற்பட்டது. இறந்தவர்களின் உடல்கள்பெங்களூர் விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications