வாகரையை மீட்டு விட்டோம்-இலங்கை ராணுவம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கையின் கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் இருந்த வாகரை நகரை மீட்டுள்ளதாக இலங்கை ராணுவம்அறிவித்துள்ளது. ஆனால் இதை விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தவில்லை.

இலங்கையின் கிழக்கில் உள்ள முக்கிய நகரம் வாகரை. இந் நகரின் பெரும்பகுதி விடுதலைப் புலிகள் வசம்இருந்து வருகிறது. வாகரையைப் பிடிக்க இலங்கை ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வந்தது.

வாகரையைச் சுற்றிலும் உள்ள தமிழர் பகுதிகள் மீது ராணுவம் நடத்திய கடும் தாக்குதலால் அங்கு வசித்து வந்ததமிழர்கள் புகலிடம் தேடி ராணுவத்தின் பிடியில் உள்ள பகுதிகளுக்கு இடம்பெயரும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ராணுவமும் அதைத்தான் விரும்பியது.

இந்த நிலையில் வாகரையில் பெரும் தாக்குதலை நடத்தி வந்த ராணுவத்தின் தொடர் நடவடிக்கையால்அங்கிருந்து 12,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தின் வசம் உள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மீது ராணுவம் உக்கிரத் தாக்குதலை மேற்கொண்டது. இதில் வாகரையைவிட்டு விடுதலைப் புலிகள் வெளியேறி விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராணுவத் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில், விடுதலைப் புலிகள் வாகரையை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் வசம் இருந்த மருத்துவமனையையும் ராணுவம் பிடித்துள்ளது என்று அதில்தெ>விக்கப்பட்டுள்ளது.

வாகரை வீழ்ந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் தகவல் ஏதும் இல்லை.இதனால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+